Latestமலேசியா

நகைக் கடைகளில் கொள்ளை ; குவந்தானில், 3 அந்நிய நாட்டவர்கள் சுட்டுக் கொலை

குவந்தான், மார்ச் 12 – பஹாங், குவந்தானுக்கு அருகில், ஜாலான் குவாந்தான் – பெக்கானில், மூன்று வெளிநாட்டவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆறு நகைக் கடை கொள்ளைச் சம்பவங்களுடன் அவர்கள் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

பெக்கானிலுள்ள நகை கடை ஒன்றை கொள்ளையிட சென்ற போது, போலீசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

போலீசாரை கண்டது அந்த அறுவரும் புரோட்டோன் வாஜா கார் ஒன்றில் தப்பிச் செல்ல முயன்றனர்.

துரத்திச் சென்று காரை சோதனையிட முயன்ற போலீசாரை நோக்கி அவர்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய வேளை ; போலீசார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்கள், 34 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட வியட்நாம் மற்றும் வங்காளதேச நாட்டவர்கள் ஆவர்.

அவர்கள் பயணித்த காரை சோதனையிட்ட போது, துப்பாக்கி ஒன்றும், ஆறு தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே சமயம், சிலாங்கூர், பஹாங், நெகிரி செம்பிலான், பேராக் மாநிலங்களிலுள்ள, ஆறு நகைக் கடைகளில் அவர்கள் கொள்ளையிட பயன்படுத்தியதாக நம்பப்படும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும், 2023-ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வரும், “செண்ட்ரோ கும்பலின்” உறுப்பினர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

அக்கும்பலை சேர்ந்த எஞ்சியவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை போலீஸ் முடுக்கி விட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!