நடுவானில் காற்று கொந்தளிப்பு ; பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்குகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்
![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-11-Jun-2024-12-13-PM-1401.jpg)
சிங்கப்பூர், ஜூன் 11 – இங்கிலாந்து, லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமான போது ஏற்பட்ட காற்று கொந்தளிப்பால் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முன் வந்துள்ளது.
அவ்விபத்தில், சிறு காயங்களுக்கு இலக்கானவர்களுக்கு பத்தாயிரம் டாலர் அல்லது ஏழாயிரத்து 800 யூரோ வழங்கப்படுமென, அந்நிறுவனம் தமது சமூக அகப்பக்கம் வாயிலாக அறிவித்துள்ளது.
கடுமையான காயங்களுக்கு இலக்கானவர்களுக்கு, அவர்களின் உடனடி தேவைகளை பூர்த்திச் செய்ய, 25 ஆயிரம் டாலர் முதலுதவியாக வழங்கப்படும். அதன் பின்னர், அவர்களின் சூழலை கண்டறிய சந்திப்புகள் நடத்தப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.
கடந்த மே மாதம், மியன்மார் வான் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த SQ321 விமானம், தீடிரென காற்று கொந்தளிப்பை எதிர்கொள்ள நேர்ந்ததால், தாய்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.