![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-04-Dec-2023-12-13-PM-1751.jpg)
கோலாலம்பூர், டிச 4 – மலேசியாவிலிருந்து சென்னைக்கு அனைத்துலக ஊடக பயிற்சியாளர்களின் அங்கீகார விருது விழாவிற்கு சென்று கொண்டிருந்தார் மலேசிய மருத்துவரான டாக்டர். N. சத்திய பிரகாஷ், நடுவானில் ஒரு முதியவரை காப்பாற்றி பலரின் பாராடைப் பெற்றுள்ளார்.
சென்னையை நெருங்குவதற்கு இன்னும் 30 நிமிடம் இருக்கும் சமயம், சுமார் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு திடிரென வியர்க்கத் தொடங்கி மயக்கமடையும் நிலையில் இருந்துள்ளார்.
அந்நேரத்தில் விமானத்தில் பயணம் செய்த டாக்டர் சத்திய பிரகாஷ் அந்த மூதாட்டிக்கு முதலுதவி வழங்கி உதவியதோடு அவரின் உயிரையும் காப்பாற்றியதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
எப்பொழுதும் ஸ்டெடோஸ்கோப் (Stetoskop) எங்கும் எடுத்துச் செல்லும் பழக்கம் தனக்கு இருப்பதினால், அச்சம்பவதில் அது அவசர சிகிச்சை அளிக்க மிகவும் உதவியதாக அவர் தனது பதிவில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
இதனிடையில் விமானத்தில் இருந்த அவசர மருத்துவப் பெட்டி, ஆகியவற்றைக் கொண்டும் பயணியைச் சோதித்து சிகிச்சை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒருவரின் உயிரைக் காக்கும் உன்னதப் பணி மருத்துவப் பணி. அதற்கு நேரம், காலம் ஏதுமில்லை. அர்ப்பணிப்பே அதன் உன்னதம் என நிரூபித்திருக்கிறார் மருத்துவர் டாக்டர். N. சத்திய பிரகாஷ்.