Latestஉலகம்

நயாகரா நீர்வீழ்ச்சி அருகே வெடிப்புச் சம்பவம்; இருவர் மரணம், ஒருவர் காயம்

வாஷிங்டன், நவ 23 – கடந்த புதன்கிழமை, அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் ரெயின்போ பாலம் அருகே வாகனம் ஒன்று வெடித்ததில், காரில் இருந்த இருவர் மரணமடைந்த வேளை, அருகில் இருந்த எல்லை பாதுகாவலர் சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தில் எந்தவொரு தீவிரவாத அம்சமும் இல்லை எனவும், காரினை வேகமாக ஓட்டியதால்தான் அந்த வெடிப்பு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக நியூ யோர்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்தார்.

அடுத்த கட்ட விசாரணைக்காக சம்பவம் நிகழ்ந்த பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!