Latestமலேசியா

நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரிப்பு; கடந்த வாரம் 2 மரணங்கள் பதிவு

கோலாலம்பூர், மார்ச் 2 – நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 24 ஆம்தேதி வரை டிங்கி காய்சலின் பாதிப்புக்கு 3,572 பேர் உள்ளாகினர்.

அதற்கு முந்தைய வாரத்தில் பாதிப்புக்கு உள்ளான 3,483 பேரை ஒப்பிடுகையில் டிங்கி காய்ச்சலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தோடு இரண்டு மரணச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர்
ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார். இவ்வாண்டு இதுவரை டிங்கி காய்ச்சலுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 29,113 பேராக அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாண்டின் முதல் 8 வாரங்களில் டிங்கி காய்ச்சலினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் 16ஆக உயர்ந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!