Latestமலேசியா

நான்காம் ஆண்டு தொடங்கி உயர்நிலை கல்வி மாணவர்களுக்கு RM100 ரிங்கிட் புத்தக voucher; மே 31 தொடங்கி வழங்கப்படும் – பிரதமர்

கோலாலம்பூர், மே 30 – நான்காம் ஆண்டு முதல் உயர்நிலை கல்வி வரையிலான மாணவர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் RM 100 ரிங்கிட் மதிப்புள்ள புத்தக voucher வழங்கப்படும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

அந்த புத்தக voucher உதவி மே 31-ஆம் திகதி, மதியம் 2 மணிக்குப் பிறகு கிடைக்கும் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, அரசாங்கம் எதிர்நோக்கும் நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு நான்காம் ஆண்டு மாணவர்களுடன் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த voucher இடைநிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், கல்வி கற்பிக்கும் நிறுவனங்களுக்கும் தகுதியானவை என இன்று கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவில் பிரதமர் தனது தொடக்கவுரையில் தெரிவித்தார்.

இந்த voucher-யைப் பெறுவதற்கான வழிமுறை நாளை மதியம் 2 மணிக்குத் தெரிவிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!