![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-27-May-2024-02-05-PM-7299.jpg)
தோக்கியோ, மே 27 – நாயாக வேண்டும் என்பதற்காக, இதற்கு முன் 14 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 66 ஆயிரம் ரிங்கிட்டை செலவழித்து அதற்கென சிறப்பு ஆடையை உருவாக்கிய ஜப்பானிய இளைஞர் ஒருவர், தற்போது நரி அல்லது பண்டாவாக மாற வேண்டும் எனும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, டோகோ எனும் அந்த இளைஞர், தாம் ஒரு விலங்காக மாற விரும்புவதை, தனது யூடியூப் சமூக ஊடகம் வாயிலாக வெளிப்படுத்தி இருந்தார்.
விலங்குகள் உலகத்தை ஆராய வேண்டும் என்ற தனது குழந்தை பருவ கனவை நிறைவேற்றிக் கொள்ள விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.
அண்மையில், உள்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த டோகோ, தற்சமயம் தாம் ஒரு புதிய விலங்காக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
தம்மிடம் நான்கு விலங்குகளின் பிரத்தியேக ஆடை உள்ளதாகவும், எனினும், அதில் இரண்டை மட்டும் அணிந்து “வாழ்ந்து” பார்க்க விரும்புவதாகவும் டோகோ கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில், இதற்கு முன் நீண்ட உரோமத்தை கொண்ட “கோலி” இன நாயாக வாழ்ந்து வந்த டோகோ கூடிய விரைவில் நரி அல்லது பண்டாவாக மாறவுள்ளார்.
தனது அந்த விநோத ஆசையை பலர் சமூக ஊடகம் வாயிலாக பாராட்டியுள்ளதாக கூறும் டோகோ, தம்மை போல பலர் விலங்குகளாக மாறி வாழ்ந்து பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.