Latestமலேசியா

நிபந்தனை இன்றி கடப்பிதழை திரும்ப பெறும் முயற்சியில் முஹிடின் தோல்வி

கோலாலம்பூர், நவம்பர் 29 – தனது அனைத்துலக பயணக் கடப்பிதழை நிபந்தனை இன்றி திரும்ப பெறும் முயற்சியில், டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தோல்விக் கண்டார்.

முஹிடினுக்கு எதிராக, மூன்று கள்ளப் பணபரிமாற்று குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவரது கடப்பிதழை திரும்ப ஒப்படைக்கும் மனுவை நிராகரித்தது.

தமக்கு எதிரான அம்மூன்று வழக்கு விசாரணைகளையும் இரத்துச் செய்யக் கோரி முஹிடின் மனு செய்துள்ளார்.

அந்த மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முஹிடினுக்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய உத்தரவாத விதிகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என நீதிபதி அசுரா அல்வி தெரிவித்தார்.

எனினும், டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கி, அடுத்தாண்டு ஜனவரி 11-ஆம் தேதி வரையில், துபாயிக்கு பயணம் மேற்கொள்ள ஏதுவாக, முஹிடினின் கடப்பிதழை அவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

ஜனவரி 15-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக, முஹிடின் தனது கடப்பிதழை மீண்டும் நீதிமன்றத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமெனும் நிபந்தனையோடு அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!