![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-01-Dec-2023-12-18-PM-1567.jpg)
வெல்லிங்டன். டிச 1 – நியூசிலாந்து முழுவதிலும் பள்ளிகளில் கைதொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் பிரதமர்
கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்துள்ளார். ஒரு காலத்தில் அதிகமானோர் படிப்பறிவு பெற்றிருந்த நியூசிலாந்து நாட்டில் படிப்பறிவு பெற்ற சமூகத்தை அதிகரிப்பதற்கு வகுப்பறைகளில் கல்விக்கு தடையான இருக்கும் நெருக்கடிகளை தீர்க்கும் நடவடிகையாக கைதொலைபேசிக்கு தடை விதித்திருப்பதாக அவர் கூறினார். தாம் பிரதமர் பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள் பள்ளிகளில் கைத்தொலைபேசிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக ஏற்கனவே லக்சன் தெரிவித்திருந்தார். கைத்தொலைபேசி தொல்லைகள் இன்றி மாணவர்கள் வகுப்பறைகளில் பள்ளி பாடங்களில் கவனம் செலுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.