![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/1136636-700x470.jpeg)
ஜெம்போல், ஜூன்-9 – தனது நிர்வாண வீடியோவை வைரலாக்கப் போவதாக மிரட்டிய வெளிநாட்டு பெண்ணிடம் நெகிரி செம்பிலான், ஜெம்போலைச் சேர்ந்த முதியவர் 44,500 ரிங்கிட் பணத்தைப் பறிகொடுத்துள்ளார்.
Facebook வாயிலாக அறிமுகமான Ayuni Seri என்ற பெண்ணிடம் 61 வயது அவ்வாடவர் அப்பணத்தை இழந்ததாக, ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் Supt Hoo Chang Hook கூறினார்.
ஜூன் மூன்றாம் தேதி, ஆடைகள் எதுவுமின்றி வீடியோவில் அழைத்த அந்த இந்தோனீசிய பெண், அம்முதியவரையும் அதே போல் ஆடைகளைக் களையச் சொல்லியிருக்கிறார்.
ஒரு நிமிடம் நீடித்த அவ்வழைப்பை அப்பெண் பதிவுச் செய்வாரென்று முதியவர் கனவிலும் நினைக்கவில்லை.
அதனைப் பதிவுச் செய்து முதியவரின் கைப்பேசிக்கே அனுப்பிய அப்பெண், தான் கேட்கும் பணத்தைக் கொடுக்கா விட்டால் வீடியோவை வைரலாக்கி விடப் போவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துப் போன ஓய்வுப் பெற்ற அரசு ஊழியருமான புகார்தாரர், ஜூன் 5 முதல் ஜூன் 7 வரை, 6 தடவையாக மொத்தம் 44,500 ரிங்கிட்டை அப்பெண் கொடுத்த வெவ்வேறு வங்கிக் கணக்குககளில் போட்டுள்ளார்.
அது போதாதென்று, மேலும் 58,500 ரிங்கிட்டைக் கொடுத்தால் அப்பிரச்னையை அதோடு முடித்துக் கொள்ளலாம் என்றும் அப்பெண் நெருக்குதல் கொடுத்துள்ளார்.
கையில் இருந்த மொத்தப் பணமும் முடிந்து போனதால், வேறு வழியின்றி அந்நபர் போலீசில் புகார் செய்தார்.