![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/553.jpeg)
கோலாத்திரெங்கானு, மே 28 – சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோரியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதனை ஓட்டிய 22 வயது பெண்ணும் அவரது 2 வயது குழந்தையும் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் Marang , Jalan Kuala Trengganu – Kuala Berang சாலையில் Kampung Durian Guling கில் இன்று அதிகாலை மணி 2.25அளவில் நிகழ்ந்தது. விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அந்த இளம் தாயும் அவரது குழந்தையும் இறந்ததாக Marang மாவட்ட போலீஸ் தலைவர் DSP Mohd Razman தெரிவித்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டிய பெண்ணும் அவரது குழந்தையும் kampung Bukit Bading Ajil லில் உள்ள தனது வீட்டிற்கு சென்றபோது விபத்துக்குள்ளாகினர்.