Latestஉலகம்

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய சீனாவின் சாங்கி-6 விண்கலன் ; ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்புகிறது

பெய்ஜிங், ஜூன் 4 – நிலவின் தொலைத்தூர தென் துருவத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை வெற்றிகரமாக தரையிறங்கிய சீனாவின், சாங்கி-6 (Chang’e-6)விண்கலம், ஆய்வு மாதிரிகளுடன் இன்று பூமிக்கு திரும்புகிறது.

அந்த விண்கலம் கடந்த மாதம் மூன்றாம் தேதி பாய்ச்சப்பட்டது.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய அந்த விண்கலம், அங்குள்ள பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து கொண்டு பூமிக்கு திரும்புகிறது.

நிலவின் மறுபக்க பாறைகளையும், மண் மாதிரிகளையும் ஆய்வுச் செய்வதன் வாயிலாக, கோள்கள் எப்படி தோன்றின? என்ற கேள்விக்கு விடை காணலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சீனாவின் இந்த புதிய முயற்சி, அந்நாட்டு விண்வெளி ஆய்வுத் துறையின் புதிய மைல்கல்லாக கருதப்படுவதோடு, உலக விண்வெளித் துறை சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, 2030-ஆம் ஆண்டு, அமெரிக்காவுக்கு அடுத்த படியாக, நிலவில் மனிதர்களை தரையிறங்கச் செய்யும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!