![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-01-Jun-2024-03-55-PM-6828.jpg)
கோத்தா பெலூட், ஜூன்-1 – சபா, கோத்தா பெலூட்டில் நீண்ட நாள் பகையால் கிராமத்து நண்பர்கள் இருவருக்கு இடையில் மூண்ட சண்டையில் ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
48 வயது ஆடவர் ஒருவர் தலையில் காயங்களுடன், சாலையோரம் சுயநினைவற்ற நிலையில் இருப்பதாக விடியற்காலையில் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
மருத்துவக் குழுவும் வரவழைக்கப்பட்டதில், அந்நபர் உயிரிழந்து விட்டது அதிகாலை 3.30 மணிக்கு உறுதியானது.
காயத்தை வைத்து துப்புத் துலங்கியதில், அன்றைய நாள் இரவே 42 வயது சந்தேக நபரை போலீஸ் கைதுச் செய்தது.
நண்பனை அடித்துக் கொன்று விட்டு தப்பியோடிய அந்நபர், தோட்டமொன்றில் போய் ஒளிந்துக் கொண்டார்.
பின்னர் உணவுண்பதற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த போது, அங்குக் காத்திருந்த போலீஸ் அவரை கைதுச் செய்தது.
அக்கொலை, குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.