Latestமலேசியா

பக்கவாட்டு கண்ணாடியில் மோதி விபத்து; கார் – மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை புகார் அளிக்க வருமாறு போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது

கோம்பாக், பிப்ரவரி 12 – வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், வட மாநிலங்களை நோக்கி செல்லும் வழியில், கோம்பாக்கிற்கு அருகில், விபத்தில் சிக்கிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை, முன் வந்து புகார் செய்யுமாறு போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்விபத்து தொடர்பில், சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கும் ஒரு நிமிட காணொளி ஒன்றை போலீசார் அடையாளம் கண்டிருப்பதாக, கோம்பாக் இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அபாங் கதேரி அபாங் வாஸ்லி தெரிவித்தார்.

நேற்று மாலை மணி 6.30 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.

முதலில், அவசர தடத்தில் பயணித்த கார் ஒன்று பின்னர் “ஸ்மார்ட்லேனில்” நுழைந்த போது, அக்காரின் வலது பக்க கண்ணாடியை பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

எனினும், சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி, விபத்துக்கு பின்னர் நில்லாமல் சென்று விட்டது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனால், அவ்விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், போலீஸ் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!