பெட்டாலிங் ஜெயா, பிப் 22 – பண்டார் உத்தாமாவில் பூனை வளர்ப்பவருக்கு சொந்தமான இரண்டு பூனைக் குட்டிகளை திருடியது தொடர்பில் இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட 26 வயது நபர் ஞாயிற்றுக்கிழமையன்று போலீசில் புகார் செய்திருந்ததாக பெட்டாலிங் ஜெயா துணை OCPD சூப்பிரடண்டன் M. Hussin Sollehuddin தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் 27 மற்றும் 29 வயதுடைய சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் கை தொலைபேசி , British Short Hair மற்றும் Munchkin வகை பூனைக் குட்டிகள், மற்றும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Hussin Sollehuddin தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் இதற்கு முன் குற்றங்களில் ஈடுபட்ட பின்னணியை கொண்டவர்களாவர்.
Check Also
Close