![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-11-at-1.12.37-PM.jpeg)
கோலாலம்பூர், டிச 12 – பங்கோருக்கு அருகே பங்கோர் கடலில் அடையாளம் தெரியாத உடல் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. பொதுமக்களில் ஒருவர் தகவல் கொடுத்ததைத் தொடந்து அழுகிய நிலையில் இருந்த அந்த உடல் மீட்கப்பட்டதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்டின் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து புலாவ் பங்கோர் போலீஸ் நிலையம், கம்போங் ஆச்சே கடல் போலீஸ் ,புலாவ் பங்கோர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் அதிகாரிகள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று அந்த உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக நோர்டின் அப்துல்லா தெரிவித்தார். அந்த உடலில் எந்தவொரு அடையாளமும் இல்லை. நீல நிற ஜீன்ஸ் காற்சட்டையும் சிவப்பு டீ சட்டையும் அணிந்திருந்த அந்த நபரின் உடல் இரண்டு வாரங்களாக கடலில் இருந்திருக்கக்கூடும் என நோர்டின் தெரிவித்தார்.