![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-15-May-2024-08-06-PM-6295.jpg)
கோலாலம்பூர், மே 15 – மூன்று ஆண்டுகளுக்கு முன் Bangsar Jalan Telawiயில் ஏற்பட்ட கைகலப்பில் Sanjeet Kumar என்பவரை கொலை செய்ததாக நாணயம் மாற்றுபவரான 28 வயது Syed Kamal Syed Mohamad என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் llli Marisqa Khalizan முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக Syed Kamal தலையசைத்தார். கொலைக் குற்றச்சாட்டு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டவில்லை.
ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் மற்றும் இன்னமும் தலைமறைவாக இருந்துவரும் ஒருவருடன் சேர்ந்து 2021 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் பங்சார், Jalan Telawi, Affin Bank பின்புறம் 28 வயதுடைய M. Sanjeet Kumarரை Syed Kamal கொலை செய்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த குற்றச்சாட்டு ஜூன் 17 ஆம் தேதி மறு வாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என நீதிமன்றம் நிர்ணயித்தது.
Sanjeet Kumarரை கொலை செய்ததாக 27 வயதுடைய Naresh, 28 வயதுடைய
Pravin மற்றும் 30 வயதுடைய Letchumanan ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.
இரண்டு கும்பலுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் Sanjeet Kumar மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இறந்தார். காயமடைந்த அவரது நண்பர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.