Latestமலேசியா

பங்சாரில் நிகழ்த்த கொலை தொடர்பில் ஆடவர் மீது குற்றசாட்டு

கோலாலம்பூர், மே 15 – மூன்று ஆண்டுகளுக்கு முன் Bangsar  Jalan Telawiயில் ஏற்பட்ட கைகலப்பில்  Sanjeet Kumar  என்பவரை  கொலை செய்ததாக   நாணயம் மாற்றுபவரான   28 வயது  Syed Kamal Syed Mohamad   என்பவர் மீது  குற்றஞ்சாட்டப்பட்டது. 

மாஜிஸ்திரேட்   llli  Marisqa  Khalizan   முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டதற்கு  அடையாளமாக   Syed Kamal  தலையசைத்தார். கொலைக் குற்றச்சாட்டு உயர் நீதிமன்ற  அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால்  குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டவில்லை. 

ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் மற்றும்  இன்னமும் தலைமறைவாக இருந்துவரும்  ஒருவருடன் சேர்ந்து   2021 ஆம்  ஆண்டு மார்ச்    13ஆம் தேதி அதிகாலை  ஒரு மணியளவில் பங்சார், Jalan Telawi,  Affin Bank பின்புறம்   28 வயதுடைய   M. Sanjeet  Kumarரை  Syed Kamal  கொலை செய்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. 

அந்த குற்றச்சாட்டு   ஜூன் 17 ஆம் தேதி  மறு வாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என  நீதிமன்றம்  நிர்ணயித்தது.  

Sanjeet Kumarரை  கொலை செய்ததாக    27 வயதுடைய Naresh,  28  வயதுடைய 

Pravin  மற்றும்   30 வயதுடைய  Letchumanan   ஆகியோர் மீது  கடந்த ஆண்டு ஏப்ரல்   13ஆம் தேதி  குற்றஞ்சாட்டப்பட்டது.  

இரண்டு கும்பலுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில்  Sanjeet Kumar  மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இறந்தார்.  காயமடைந்த அவரது நண்பர்    கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!