Latestமலேசியா

பண்டார் சுல்தான் சுலைமான் காவல்துறை வீட்டுவசதி சாவி ஒப்படைப்பு விழா

கிள்ளான், மார்ச் 4 – இன்று வட கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமான் காவல் நிலையத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு வீட்டு சாவி வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸ்ருதீன் ஹீசைன் ,துணைக் காவல் கண்காணிப்பாளர் டத்தோ ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை மற்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசைன் உமர் கான், வட கிள்ளான் மாவட்ட போலிஸ் தலைவர் விஜய ராவ் சமாச்சுலு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

போர்ட் கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமான் காவல் நிலையத்தில் உள்ள காவலர் குடியிருப்புகளின் இரண்டு தொகுதிகளை 1.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் 20 வீடுகள் இணைக்கப்பட்டு 10 வசதியான வீடுகளாக உருவாக்கப்பட்டுள்ளன என வட கிள்ளான் மாவட்ட போலிஸ் தலைவர் விஜய ராவ் சமாச்சுலு வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

மடானி அரசாகத்தின் வழி 9 காவல் துறையினருக்குக் கிடைத்த வசதியான வீட்டிற்கு போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸ்ருதீன் ஹீசைன் நன்றிகளை சமர்பித்தார்.
விரைவில் புதிய காவல் துறை வீடமைப்பு திட்டங்கள் வருவதையும் அவர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!