Latestமலேசியா

பதின்ம வயது பெண் நோயாளியிடம் ஆபாச சேட்டை; போலீஸ் ஜாமீனில் மருத்துவர் விடுவிப்பு

பாரிட், ஜூன்-9 – பேராக், பாரிட்டில் 15 வயது பெண்ணை மானபங்கம் செய்த சந்தேகத்தின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை கைதான மருத்துவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

3 நாள் விசாரணைத் தடுப்புக் காவல் முடிவடைந்ததை அடுத்து 29 வயது அவ்வாடவர் விடுவிக்கப்பட்டதாக, பேராக் தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Hafezul Helmi Hamzah கூறினார்.

அம்மருத்துவர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் மேலும் சிலரின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

விசாரணைத் தொடருகிறது; அது முழுமைப் பெற்றதும் மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறை அலுவலகத்திடம் அறிக்கைச் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.

Changkat Melintang மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து அம்மருத்துவர் தனக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லைக் கொடுத்ததாக, அந்த பதின்ம வயதுப் பெண் முன்னதாக போலீசில் புகார் செய்திருந்தார்.

இதையடுத்து 2017 சிறார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அந்நபர் கைதானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!