
பஹாட், மே-9 – ஜோகூர், பத்து பஹாட், கம்போங் பாரிட் கந்தோங் லாவுட்டில் உள்ள செம்பனைத் தோட்டத்தில், கிராம மக்கள் இரண்டாவது முதலையைப் பிடித்துள்ளனர்.
கிராம மக்களில் ஒருவருக்குச் சொந்தமான ஓர் ஆட்டுக் குட்டியை விழுங்கியப் பிறகு, 3 மீட்டருக்கும் கூடுதலான நீளம் கொண்ட அப்பெண் முதலை பிடிபட்டது.
அருகில் அது அடைகாத்து வந்த 50 முட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
முதலையும் அதன் முட்டைகளும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னிடம் ஒப்படைக்கப்பட்டன.
சிலாங்கூர் டெங்கிலில் உள்ள Paya Indah Wetlands விலங்குகள் சரணாலயத்துக்கு அவை கொண்டுச் செல்லப்பட்டன.
இவ்வாரத்தில் அப்பகுதியில் முதலைப் பிடிபடுவது இது இரண்டாவது சம்பவமாகும்.
முன்னதாக, புதன்கிழமை 4.5 மீட்டர் நீளமுள்ள பெண் முதலையை கிராமத்து மக்கள் பிடித்து PERHILITAN-னிடம் ஒப்படைத்தனர்.