![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-18-Mar-2024-08-36-PM-6897.jpg)
ஜோகூர் பாரு, மார்ச் 18 – ஜோகூர், பத்து பஹாட்டிலுள்ள, தொழிற்சாலை ஒன்றில் தான், “அல்லா” எனும் பெயர் பதிக்கப்பட்ட காலுறைகள் அச்சிடப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில், போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஜோகூரிலுள்ள தொழிற்சாலைக்கு அந்த காலுறைகள் அனுப்பப்பட்டது தெரிய வந்துள்ளதை அடுத்து, அது தொடர்பில் விசாரணை தொடங்கியுள்ளதாக, ஜோகூர் இஸ்லாமிய மன்ற தலைவர் முஹமட் பாரிட் முஹமட் காலிட் தெரிவித்தார்.
அல்லா வார்த்தை அச்சிடப்பட்ட காலுறை விற்பனை, முஸ்லீம்களிடையே சினத்தையும், வருத்தத்தையும் தூண்டியுள்ளது.
எனினும், விசாரணை நிறைவடையும் வரையில் பெருமையை கடைபிடிக்குமாறும், ஆருடங்களை வெளியிட வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
அவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைக்கு, மாநில இஸ்லாமிய மன்றம் முழு ஒத்துழைப்பை வழங்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.