Latestமலேசியா

பழன் அறவாரியத்தின் தமிழ் அமுது 1, இலக்கிய விழா 2024

சைபர்ஜெயா, மார்ச் 29 – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி, சனிக்கிழமை பழன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் இலக்கிய விழா ஒன்று, விருது விழாவாக ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு டத்தோ ஸ்ரீ தெய்வீகன் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்த விழாவில் தமிழ்நாட்டுத் தன்முனைப்புப் பேச்சாளர் ஐ.பி.எஸ் கலியமூர்த்தி, நம் நாட்டின் பேச்சாளர் பாண்டித்துரை ஆகியோர் செவிக்கினிய உரைகளை வழங்கவிருக்கின்றனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், பழன் அறவாரியத்தின் ஆலோசகருமான தான் ஸ்ரீ பழன், இலக்கிய ஆர்வலர்கள், பேராசிரியர்கள், என்று பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வெறும் இலக்கிய உரை மட்டுமின்றி, ஆடல் பாடல் என நம் கலைகளோடு இந்நிகழ்ச்சி அமையவுள்ளது. இலவசமாக நடைபெறவுள்ள இந்த விழாவில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

சிலாங்கூரில் உள்ள சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவில் இலக்கிய ஆர்வலர்களோடு பொது மக்களும் திரளாக வந்து கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!