![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/2611434.jpg)
கோலாலம்பூர், மார்ச் 26 -நாட்டில் பஸ் ஓட்டுனர்களின் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 5,000 வேலை வாய்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை இருப்பதாக அகில மலேசிய பஸ் நடத்துனர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ Ashfar Ali தெரிவித்திருக்கிறார். பஸ் ஓட்டுனர்களான வேலை செய்ய விரும்வோருக்கு அராங்கம் இலவச பயிற்சிகளை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பஸ் ஓட்டுனர்களின் பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் மோசமடைந்து வருவதையும் Ashfar Ali சுட்டிக்காட்டினார். ஓய்வு பெறுவதாலும் மற்றும் பஸ் ஓட்டுனர்கள் விலகி கவர்ச்சிகரமான சம்பளத்திற்காக சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதால் பஸ் ஓட்டுனர்கள் கிடைப்பதில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.