![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-07-Jun-2024-11-04-AM-6400.jpg)
பாங்கி, ஜூன்-7 – சிலாங்கூர், பாங்கியில் தாங்கள் பயணித்த Viva காரில் இருந்து திடீரென புகை கிளம்பி அது தீப்பற்றிக் கொண்டதில், தாயும் அவரின் மகனும் பதறிப் போயினர்.
இச்சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் Bandar Seri Putra சாலை சமிக்ஞை விளக்குச் சந்திப்பில் நிகழ்ந்தது.
8 வயது மகனைப் பள்ளியில் விடுவதற்காகச் சென்றுக் கொண்டிருந்த போது காரில் இருந்து புகைக் கிளம்பியதாக 36 வயது Syazwana Ahmad Sabri Parwira கூறினார்.
ஏதோ எரிவதை உணர்ந்த அவர் முதலில் அலட்டிக் கொள்ளவில்லை; அதிகப்படியான புகை கிளம்பிய போதே, பயத்தில் கார் எஞ்சினை நிறுத்தியுள்ளார்.
தீ பரவத் தொடங்கியதும் மகனைக் கூட்டிக் கொண்டு காரில் இருந்து வெளியேறியதாக Syazwana சொன்னார்.
தீயணைப்பு வண்டி வருவதற்குள் கார் முழுவதுமாக எரிந்துப் போனது.
எஞ்சின் மற்றும் கார் வையர்களில் ஏற்பட்ட கோளாறே தீக்கு காரணம் என தீயணைப்பு மீட்புத் துறை சந்தேகிக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன் ஆசையாய் வாங்கிய கார் தன் கண் முன்னே எரிந்து போனதால் அவர் உடைந்து கண் கலங்கினார்.
என்றாலும், தாமும் மகனும் உயிர் தப்பியதை நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்வதாக அவர் குறிப்பிட்டார்.