![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/2610939-700x470.jpg)
ஜோகூர் பாரு, மார்ச் 26 – பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் லோரி ஒன்று இதர 11வாகனங்களை மோதிய விபத்தில் மூன்று மோட்டார்சைக்கிளோட்டிகள் காயம் அடைந்தனர். Taman Daya வுக்கு அருகே நெடுஞ்சாலையின் 11.1 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அந்த விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு ஆடவரும் தங்களது முகத்தில் காயம் அடைந்தனர். சாலையின் நடுத்தளத்தில் Perling கிலிருந்து வந்துகொண்டிருந்த கருப்பு நிற கார் ஒன்று திடீரென சாலையின் வலது பக்கம் நுழைந்ததைத் தொடர்ந்து அந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுவதாக தென் ஜோகூர் பாரு OCPD துணை கமிஷனர் Raub Selamat தெரிவித்தார்.
40 வயதுடைய டிரெய்லர் லோரி ஓட்டுனர் அந்த காரை மோதுவதை தவிர்க்க முயன்றபோது லோரி கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையின் தடுப்பில் மோதிபின் பெர்லிங்கை நோக்கி சென்றுகொண்டிருந்த எதிர்ப்புற சாலைப் பகுதியில் புகுந்ததால் எட்டு கார்கள் மற்றும் இதர மூன்று லோரிகளை மோதியது. இதனால் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக ACP Raub கூறினார். இந்த விபத்தில் காயம் அடைந்த 20 மற்றும் 60 வயதுக்குட்பட்ட மூவர் மருத்துவ சிகிச்சைக்காக Sultan Ismail மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.