![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/2472821.jpeg)
கோலாலம்பூர், மார்ச் 20 – பாடு தரவுத் தளத்தில் தங்கள் தகவல்களை பதிந்து கொள்ளத் தவறும் தனிநபர்கள், அரசாங்கத்தின் உதவி அல்லது மானியங்களை பெறுவதில் இருந்து விடுபட்டு போய்விடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனினும், தனிநபர்கள் அல்லது குடும்பங்களின் தரவுகளை திரட்ட, அரசாங்கம் ஒருங்கிணைப்பு முறைகளைப் பயன்படுத்தும் என பொருளாதார துணை அமைச்சர் டத்தோ ஹனிபா ஹஜர் தைப் தெரிவித்தார்.
மார்ச் 12-ஆம் தேதி வரையில், பாடு தரவுத் தளம், பல்வேறு ஏஜென்சிகளிடமிருந்து, 314 தரவுத் தொகுப்புகளை ஒருங்கிணைத்துள்ளது.
அது, விரிவான தனிநபர் தரவுகளை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைந்ததாக ஹனிபா சொன்னார்.
அதில், ரஹ்மா உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்துள்ள, 86 லட்சம் B40 பிரிவை சேர்ந்தவர்களின் தரவுகளும் அடங்கும்.
அதனால், பாடு தரவுத் தளத்தில் பதிவை அதிகரிக்க, அனைத்து தரப்பினரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் அரசாங்கம் வரவேற்பதாக, மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது ஹனிபா குறிப்பிட்டார்.