Latestஉலகம்

பாட்டில்களில் இரண்டு குழந்தைகளின் சடலம்; ஹாங்காங்கில் பரபரப்பு

ஹாங்காங், மார்ச் 11 – ஹாங்காங்கில் அமைந்துள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்ணாடி பாட்டிலில் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான முதற்கட்ட பிரேத பரிசோதனையில் அந்த குழந்தைகளின் வயது 24 முதல் 30 வாரங்களுக்கு இடைப்பட்டவை என தெரியவந்துள்ளது.

இதனிடையே, அந்த சந்தேக நபர்கள் தான் குழந்தையின் பெற்றோர்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கு டி.என்.ஏ சோதனை நடத்தப்படுவதாக ஹாங்காங் ஊடகங்கள் தகவல்களை வெளியாகியுள்ளன.

குடியிருப்பு பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு துப்புரவு பணியாளர் தான் இந்த சடலங்களை கண்டுபிடித்துள்ளர்.

அந்த பாட்டில் ஒரு நீளமான வெள்ளை துண்டால் மூடப்பட்டிருந்ததும், அதில் அறியாத ஒரு திரவம் நிரப்பியிருந்ததையும் போலிஸ் அடையாளம் கண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேல் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!