![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-23-Nov-2023-01-24-PM-3672.jpg)
கோலாலம்பூர், நவ 23 – பாலஸ்தீனர்களின் பிரச்சனைகளை அனைத்துலக அளவில் முன்னெடுத்து பேசுவதிலும் ஆதரவளிப்பதிலும் மலேசியப் பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் தொடர்ச்சியாகவும் நிலையாகவும் இருந்து வருவதை யாரும் கேள்வி கேட்க முடியாது என மலேசியாவுக்கான பாலஸ்தீன தூதர் வாலிட் அபு அலி கூறியுள்ளார்.
ஐநா சபை, ஆசியான் உச்சநிலை மாநாடு, இஸ்லாமிய அரபு கூட்டு உச்ச மாநாடு உட்பட அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடமும் மலேசியாவின் நிலைப்பாட்டை அன்வார் உறுதியோடு எடுத்துரைத்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பாலஸ்தீன விவகாரத்தில் அனைத்து மலேசியர்களும் ஒன்றிணைந்து ஆதரவை தருவதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
பெர்னாமா தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சுன் வாய் மரியாதை நிமித்தம் பாலஸ்தீன தூதரகத்திற்கு வருகை தந்தபோது வாலிட் அவ்வாறு கூறினார்.
சில அனைத்துலக நாடுகள் இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் இரட்டை நிலை போக்கை கொண்டிருப்பது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.
2.3 மில்லியன் பாலஸ்தீனர்கள் கடந்த 1948 தொடங்கி பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதை, மத கண்ணோட்டத்திற்கு அப்பார்ப்பட்டு மனித நேய அடிப்படையில் அணுக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.