Latestமலேசியா

பாலிங்கில் கார் பள்ளத்தில் விழுந்தது; கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட மூவரை தீயணைப்புத் துறை பாதுகாப்பாக மீட்டது

பாலிங், ஏப்ரல் 26 – கெடா, பாலிங்கில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில், 7 மாத கர்ப்பிணி உள்ளிட்ட மூவர் கொண்ட குடும்பம் தெய்வாதீனமாக உயிர். தப்பியது.

Jalam Gunung Inas-சில் நேற்று மாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஏனைய இருவர், 27 வயது கணவர் மற்றும் 3 வயது பையன் ஆவர் என பாலிங் தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.

10 மீட்டர் பள்ளத்தில் தனது Honda City கார் விழுந்து, அது உருண்டு போவதற்குள் பையனைத் தந்தை பாதுகாப்பாக வெளியே எடுத்திருக்கிறார்.

காரினுள் சிக்கிக் கொண்ட கர்ப்பிணி மனைவியைத் தீயணைப்பு வீரர்கள் போராடி பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

வலியிலும் பதட்டத்திலும் இருந்த அம்மூவரும் பாதுகாப்பாக மேலே கொண்டு வரப்பட்டு, உடனடியாக பாலிங் மருத்துவமனைக்குக் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!