![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-05-Dec-2023-04-24-PM-2141.jpg)
கோலாலம்பூர், டிசம்பர் 5 – நாட்டில், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
PSSS – ஓரிட சமூக ஆதரவு மையத்திடம் செய்யப்பட்ட புகார்கள் அடிப்படையில் அது தெரிய வந்துள்ளது.
அந்த மையம், 14 நாட்களுக்கு ஏற்பாடு செய்திருந்த, ஜெராயாவாரா காசெக் அல்லது பாலியல் தொல்லைக்கு எதிரான இயக்கம் நெடுகிலும், ஆயிரத்து 486 புகார்கள் பெறப்பட்டதாக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோ ஐமான் அதிரா சாபு தெரிவித்தார்.
அந்த எண்ணிக்கையில், 27.7 விழுக்காடு அல்லது 411 சம்பவங்கள் ஆண்களை உட்படுத்தியவை என, மேலவை கேள்வி பதில் நேரத்தின் போது ஐமான் சொன்னார்.
அதே சமயம், கடந்த மே மாதம் அறிமுகம் கண்டதில் இருந்து, அக்டோபர் வரையில், பாலியல் தொல்லைகள் குறித்து PSSS – ஓரிட சமூக ஆதரவு மையம், மொத்தம் ஆயிரத்து 213 புகார்களை பெற்ற வேளை ; அதில் 28.9 விழுக்காடு அல்லது 351 சம்பவங்கள் ஆண்களை உட்படுத்தியது என்பதையும் ஐமான் சுட்டிக்காட்டினார்.