![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-29-Nov-2023-11-20-AM-3276.jpg)
ஜோர்ஜ் டவுன், நவ 29 – பினாங்கில் இடிந்து விழுந்த லொஜிஸ்டிக் (logistic) கிடங்கின் கட்டுமான பணியை ஏற்கனவே நிறுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பினாங்கு மாநாகர் மன்றத்தின் கவுன்சிலர் டத்தோ A. ராஜேந்திரன் தெரிவித்திருக்ககிறார். பொறியியல் ஆலோசகருமான ராஜேந்திரன் இடிந்த கட்டிட பகுதிக்கு வருகை புரிந்தபோது இன்று இதனை தெரிவித்தார். ஏற்கனவே இந்த கட்டுமான வேலையை நிறுத்தும்படி அதன் மேம்பாட்டாளருக்கு நாங்கள் உத்தரவிட்டிருந்தோம். ஆனால் அவர்கள் அதனை புறக்கணித்தனர். அதோடு அந்த கட்டிடத்தின் கட்டுமான பணி தாமதப்படுத்தப்பட்டது மட்டும் அவசர அவசரமாக அதனை கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்படும் தகவலையும் ராஜேந்திரன் மறுத்தார்.