Latestமலேசியா

பிரதமரை கொல்லப் போவதாக பதிவு; சிங்கப்பூரில் பணிப்புரியும் மலேசிய பெண்ணுக்கு எதிராக குற்றச்சாட்டு

அம்பாங், நவம்பர் 1 – மூன்றாண்டுகளுக்கு முன், பிரதமரை கொலை செய்யப்போவதாக, சமூக ஊடகத்தில் பதிவிட்ட, சிங்கப்பூரில் பணிப்புரியும் மலேசிய பெண் ஒருவருக்கு எதிராக, இன்று அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

எனினும், தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து 31 வயது தாய் ஜீ சிங் எனும் அப்பெண் விசாரணை கோரினார்.

2020-ஆம் ஆண்டு மார்ச் முதலாம் தேதி, நாட்டின் எட்டாவது பிரதமராக டான் ஸ்ரீ முஹிடின் யாசின் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்ட போது, அப்பெண் தனது முகநூலில், “புதிய பிரதமரை கொலை செய்ய ஆள் ஒன்றை நியமிக்கப் போவதாக” தமது முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

அதனால், தொடர்பு பல்லூடக சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ள வேளை; குற்றம் நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது ஓராண்டுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இன்று அப்பெண்ணை பத்தாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இவ்வழக்கு விசாரணை டிசம்பர் 20-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!