![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/SlugDunia_Pencuri-merompak-kedai-beli-belah-terkenal-di-Perancis.jpeg)
பாரில், ஜூன் 11 – பிரான்ஸ், பாரிசிலுள்ள, Champs-Elysees அவென்யூவிற்கு அருகிலுள்ள, சேனல் (Chanel) எனும் சொகுசு பிராண்ட் ஸ்டோரை, கொள்ளையர்கள் சிலர் காரை கொண்டு மோதி கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மற்றொரு காரில் தப்பிச் செல்வதற்கு முன், சேனல் ஸ்டோரை மோதப் பயன்படுத்திய காருக்கு அவர்கள் எரியூட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு நேரப்படி, காலை மணி 11 வாக்கில் அக்கொள்ளை சம்பவம் மேற்கொள்ளப்பட்டது.
சேனல் கடையை மோதி உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த நகைகளை கொள்ளையிட்டப் பின், கடையை மோதப் பயன்படுத்தப்பட்ட காருக்கு எரியூட்டினர்.
எனினும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்ப்புப் படை வீரர்கள், தீயை அணைத்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அக்கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.
அச்சம்பவத்தால் ஏற்பட்ட மொத்த சோதமும், இழப்பும் இன்னும் தெரியவில்லை.
பிரான்சில், சொகுசு கடைகளை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் மூன்றாவது கொள்ளை சம்பவம் அதுவாகும்.
கடந்த மே மாதம், ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த கொள்ளையர்கள், மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட விலை உயர்ந்த நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.