![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-13-Feb-2024-09-48-AM-3680.jpg)
லண்டன், பிப்ரவரி 12 – பிரிட்டனிலுள்ள, விமான நிலையம் ஒன்றில், UFO எனும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, விமானங்கள் தரையிறங்கும் போது, அந்த விநோதமான பறக்கும் பொருட்கள் தென்படுவதாக கூறப்படுகிறது.
2022- ஆம் ஆண்டு, ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Ryanair விமானம், மணிக்கு 370 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த போது, 20 மீட்டர் தொலைவில், விநோதமான ஒரு கருப்பு பொருள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆறாண்டுகளில், இங்கிலாந்து எசெக்ஸில், UFO பறக்கும் பொருட்களை உட்படுத்திய 27 சம்பவங்களில், இதுவும் ஒன்றாகும்.
எனினும், அச்சம்பவம் தொடர்பில் இதுவரை வான் போக்குவரத்து துறையிடம் புகார் எதுவும் செய்யப்படவில்லை.
அதே சமயம், அண்மைய சில ஆண்டுகளாக, தங்கள் விமானம் தரையிறங்கும் போது, சுமாராக 152 மீட்டர் தொலைவில், மோதல் தவிர்ப்பு சமிக்ஞை ஒலித்ததாக, விமானிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, தங்கள் விமானத்தை சுற்றி அந்த பறக்கும் பொருட்கள் வட்டமிட்டதாக, விமானிகள் சிலர் திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளனர். எனினும், உண்மையில் அது என்ன பொருள் என்பது மட்டும் அவர்களுக்கு தெரியவில்லை.