![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-10-at-08.54.11_10318672.jpg)
கோலாலம்பூர், மார்ச் 10 – கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் வட்டாரத்தில் 10 உடம்புப் பிடி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 48 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 84 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். புக்கிட் அமன் குற்றவியல் விசாரணைத்துறை குழுவின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 71 பேர் உடப்புப் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் என கூறப்பட்டது. உள்நாட்டைச் சேர்ந்த இருவருடன் 63 மியன்மார் பிரஜைகள் கம்போடியா, தாய்லாந்து ,வங்காளதேசம் , சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் உடம்புப்பிடி நிலையங்களை சேர்ந்த 10 நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டதாக குற்றவியல் விசாரணைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 3,979 ரிங்கிட் ரொக்கம், 9 சிசிடிவி பதிவு கருவிகள், நான்கு ‘WIFi Modems’ ஆகியவரையும் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து 10 உடம்புப்பிடி நிலையங்களில் வேலை செய்த ஆண்களும் பெண்களும் முறையான பெர்மிட்டை கொண்டிருக்கவில்லை என்பதோடு எட்டு நிலயங்கள் வர்த்தக லைசென்ஸ்சையும் கொண்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.