![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-18-Mar-2024-08-19-PM-6910.jpg)
ஷா அலாம், மார்ச் 18 – ‘Seminyih’யில் உள்ளூர் மலையேறிகளுக்கு பிரபலமாக திகழும் ‘Bukit Broga’ மலையேறும் பகுதி இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவாக சிலாங்கூர் காட்டுவளத்துறை தனது முகநூலில் பதிவிட்டுள்ளது.
பிறகு அறிவிக்கப்படும் தேதிவரை ‘Bukit Broga’ மலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மலையின் உச்சியில் 0.8 ஹெக்டர் காடுகளில் தீப்பற்றியதாக இதற்கு முன்னதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குனர் ‘Wan Md Razali wan Ismail’ தெரிவித்திருந்தார்.
சிலாங்கூரில் உலு லங்காட், ‘Semenyih’ , ‘Bangi’ , ‘Ampang’ ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 17 உறுப்பினர்களுடன் போலீஸ் மற்றும் மலேசிய பொது தற்காப்பு படை உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 64 பேர் ‘Bukit Broga’வில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் நடவடிக்கையில் உட்படுத்தப்பட்டனர்.
இன்று அதிகாலை மணி 2.30 அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.