![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-21-May-2024-09-34-PM-3378.jpg)
கோலாலம்பூர், மே-21, எக்காலத்திற்கும் பொருந்தும் தத்துவங்களைக் கூறிச் சென்றுள்ள ‘கௌதம புத்தர்’ எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது விசாக தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
எக்காலத்திற்கும் பொருந்தும் ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ ஆகிய எண்வகை வழிகளையும் போதித்த புத்தர், இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர்.
மன அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், புத்தரின் வாழ்க்கையும் போதனைகளும் ஒரு சிறந்த மருந்தாக அமையும்.
விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்ட புத்தரின் போதனைகள் அனைத்தும், மனிதர்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கும் வித்தையைக் கொண்டவை என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களும், மகான்களின் வாழ்க்கைப் போதனைகளும் மனித வாழ்வில் முக்கிய அங்கமாக அமைகின்றன.
அவர்கள் கடந்து வந்த பாதையை நாம் கருத்தில் கொண்டு நமது இன்றைய வாழ்க்கையைச் செழுமையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என, தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது விசாக தின வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டார்.