Latestமலேசியா

புத்ராஜெயாவில், மாணவியிடம் ஆணுறுப்பை காட்டிய ஆடவன் கைது

புத்ராஜெயா, நவம்பர் 30 – புத்ராஜெயாவில், கடந்த திங்கட்கிழமை, மாணவி ஒருவரிடம் பிறப்புறுப்பை காட்டி ஆபாசமாக நடந்து கொண்ட ஆடவன் கைது செய்யப்பட்டான்.

பொருள் விநியோகிப்பாளரான அந்த 32 வயது ஆடவன், செவ்வாய்கிழமை மாலை மணி ஆறு வாக்கில், புத்ராஜெயா போலீஸ் தலைமையகத்தின் வளாகத்தில் கைதுச் செய்யப்பட்டான்.

பிரிசின் ஐந்தில், அரசாங்க குடியிருப்பு பகுதியிலுள்ள, மின்தூக்கியில் அவன் அந்த காம சேட்டையை புரிந்ததாக, புத்ராஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஏ அஸ்மாடி அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

தலைகவசம் அணிந்திருந்த ஆடவன் ஒருவன் தம்மிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவத்தை அம்மாணவி அவரது தாயாரிடம் கூறவே, அவர் செய்த புகாரின் அடிப்படையில் அவன் கைதானான்.

அதே சமயம், சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதியில் இருந்து, ஏற்கனவே அதுபோன்ற சம்பவம் தொடர்பில், ஐவரை உட்படுத்திய நான்கு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதில் மூன்று சம்பவங்களுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதை கைதான ஆடவன் ஒப்புக் கொண்டுள்ளதையும், அஸ்மாடி உறுதிப்படுத்தினார்.

2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்றச்செயல் சட்டத்தின் கீழ், அவன் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!