Latestமலேசியா

புந்தோங்கில் ஆயுதம் ஏந்திய ஆடவன் வர்த்தகரிடம் 15,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்க சங்கிலியை கொள்ளையிட்டான்

ஈப்போ, மே 25 – புந்தோங்கில் ஆயுதம் ஏந்திய ஆடவன் ஒருவன் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து 15,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை அவரிடமிருந்து கொள்ளையிட்டு தப்பிச் சென்றான். Jalan Coldstream மில் அதிகாலை மணி 2.55 அளவில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்ததாக ஈப்போ OCPD துணை கமிஷனர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார். வெள்ளை நிற Sedan காரை ஓட்டிவந்த அந்த சந்தேகப்பேர்வழி கையில் பாரங் கத்தியுடன் அந்த வர்த்தகரை துரத்திச் சென்ற பின் அவரது சங்கிலியை பறித்துள்ளான். தலையில் தொப்பி மற்றும் முகக் கவரி அணிந்திருந்த அந்த சந்தேகப் பேர்வழி அந்த வர்த்தகரிடம் கொள்ளையிட்ட சம்பவம் குறித்த காணொளி ஒன்று FTopnews முகநூலில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து Abang Ahmad இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.

அந்த சந்தேக நபர் முதலில் அந்த வர்த்தகரின் வீட்டை கடந்து சென்றுள்ளான்.பின்னர் தனது காரை பின்னால் நகர்த்தி அவ்வீட்டின் நுழைவாயிலுக்கு முன்னதாக நிறுத்துவதையும் 5 நிமிடம் 34 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளியில் காணமுடிந்தது. மேலும் தங்கச் சங்கிலியை அபகரித்த பின் அந்த கொள்ளையன் தனது காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றான். இதனிடையே அந்த கார் பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள சாலையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக Abang Zainal தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!