![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-13-Feb-2024-10-10-AM-5069.jpg)
கிள்ளான், பிப் 13 – புலாவ் கெத்தாமில் வெளிநாட்டு பிரஜையிடம் கத்தி முனையில் கொள்ளையிட்ட மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 24 வயதுடைய ஆடவரிடமிருந்து தாங்கள் புகாரை பெற்றதாக தென் கிள்ளான் துணை ஓ.சி.பி.டி சுப்ரிடெண்டன்ட் கமலாரிஃபின் அமான் ஷா தெரிவித்தார். புலாவ் கெத்தாமிற்கு அருகே தாம் இரண்டு நண்பர்களுடன் நடந்துசென்று கொண்டிருந்தபோது மூன்று ஆடவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு அவர்களில் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டியதோடு ஒருவரை அறைந்துள்ளான். அதன் பின் அந்த சந்தேகப் பேர்வழிகள் கை தொலைபேசிகள் , கடப்பிதழ்கள் மற்றும் ரொக்க தொகையையும் கொள்ளையடித்த பின் போர்ட் கிள்ளான் படகுத்துறையை நோக்கி படகில் சென்றனர். இது தொடர்பான புகார் கிடைத்தவுடன் அன்றைய தினமே மாலை மணி 4 அளவில் 29 மற்றும் 33 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவன் செராசில் நடைபெற்ற ஆயுதக் கொள்ளை தொடர்பாக தேடப்பட்டு வந்தவன் என கமலாரிஃபின் வெளியிட்ட அறிகையில் தெரிவித்துள்ளார்.