![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-24-Feb-2024-10-45-AM-9847.jpg)
பூச்சோங், பிப்ரவரி 24 – சிலாங்கூர், பூச்சோங்கில் நேற்று மதியம் எரிவாயு கொள்கலன் வெடித்த சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறியிருக்கின்றனர்.
தாமான் பெரிண்டாஸ்திரியான் பூச்சோங்கில் உள்ள தொழிற்சாலையில் அவ்வெடிப்பு ஏற்பட்டது.
பெரும் சத்தத்துடன் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் உதவிக் கூக்குரல் எழுப்பியதை தாம் கண்டதாக சென் எனும் 40 வயது நபர் கூறினார்.
அந்த தொழிற்சாலையின் உரிமையாளரும் சம்பவ இடத்தில் இருந்தார்;ஆனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என சென் சொன்னார்.
வெடிப்பு ஏற்பட்டு கரும்புகை கிளம்பியதில் உயிரிழப்பு ஏற்படும் என தாம் நினைக்கவில்லை என 100 மீட்டர் தொலைவில் இருந்து சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொருவர் கூறினார்.
அதில் அத்தொழிற்சாலையின் கூரைகள் உடைந்து விழுந்ததை தாம் கண்டதாக அவர் சொன்னார்.
தனது கடை வரை அக்கூரைகளின் சிதறல்கள் இருந்ததாகக் கூறிய அவர், நண்பரின் கார் கண்ணாடி உடைந்த போன தகவலையும் சொன்னார்.
நேற்றைய அவ்வெடிப்பில் இருவர் உயிரிழந்த வேளை, மேலும் இருவர் காயமடைந்தனர்.
எரிவாயு கொள்கலன் வெடிப்புக்கான காரணத்தை போலிஸ் விசாரித்து வருகிறது.