Latestமலேசியா

பூச்சோங் தாமான் கின்ராரா அருகே மரம் விழுந்தது, காரில் சென்ற ஐவர் பாதிப்பு

பூச்சோங், மே 27 – கிள்ளான் பள்ளத்தாக்கில் இப்போதெல்லாம் கடுமையான மழை மற்றும் காற்றின்போது மரம் விழுவதும் அதனால் பலர் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வார காலமாக இப்படிப்பட்ட சம்பவங்கள் நாட்டின் பல இடங்களில் ஏற்பட்டு வருகிறது.

ஆகக்கடைசியாக இன்று மாலையில் பெய்த கடும் மழையின்போது பூச்சோங்கில் Plaza PK தாமான் கின்ராராவுக்கு அருகே மரம் விழுந்ததில் ஹோண்டா காரில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டனர். மரம் விழுந்த இடத்திலிருந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் .

மாலை மணி 4.24 அளவில் இச்சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் தெரிவித்தார். மரம் விழுந்ததில் ஏழு கார்கள் சேதம் அடைந்ததாக பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். அந்த மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!