Latestமலேசியா

பூனைகளை சாக்குப் பையில் கட்டி ஆற்றில் வீசி வந்த நபர்; கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பரவலாக வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன்-1 – பினாங்கு, ஜெலுத்தோங்கில் மனிதாபிமானம் அற்ற வகையில் பூனைகளை சாக்குப் பையில் கட்டி ஆற்றில் வீசி வந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்நபர் அப்படி செய்வது இது இரண்டாவது முறையாகும்; ஆனால் யார் கண்ணிலும் படாததால் தப்பித்து விட்டார்.

எனினும் நேற்று காலை அவரின் செயலை நேரில் பார்த்த சாட்சி இருப்பதால், அது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் கைதாகி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என, மலேசிய விலங்குகள் நல சங்கத் தலைவர் Ari Dwi Andika வலியுறுத்தினார்.

2015 விலங்குகள் நல சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக அவர் சொன்னார்.

கட்டியிருந்த சாக்குப் பையை ஆற்றில் இருந்து ஓர் ஆடவர் எடுப்பதும், அவிழ்த்துப் பார்த்தால் அதில் பூனை மடிந்துப் போய் கிடப்பததும் வைரலாகியுள்ள 1 நிமிட காணொலியில் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!