![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/Collage-Maker-02-Nov-2023-12-36-PM-9419.jpg)
பெண்டாங், நவ 2 – பெர்லீஸ் பெண்டாங்கில் அயெர் புத்தே துணை மாவட்டத்தில் நேற்று கடும் மழையுடன் வீசிய புயலில் 74 குடும்பங்கள் தங்கியிருந்த 24 வீடுகள் சேதம் அடைந்தன. ஜாலான் ஜெனுன், தாமான் ஸ்ரீ டெலிமாவில் உள்ள வீடுகளின் பெரும்பாலான கூரைகள் நேற்று மாலை 4, 30 அளவில் பறந்து சென்றதாக பெண்டாங் மாவட்ட மலேசிய சிவில் தற்காப்பு படைகளின் அதிகாரி லெப்டனன் யூஸ்லினா யூசஃப் தெரிவித்தார்.
தகவல் அறிந்தவுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற சிவில் தற்காப்பு படை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிக நிவாரண மையங்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கும் ஏற்பாடுகளை செய்தனர். Pendang சுகாதார கிளினிக்கிற்கு அருகிலும் ‘Keda Asam Jawa’ வீடமைப்பு பகுதியிலும் மரங்கள் வேருடன் சாய்ந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக யூஸ்லினா யூசஃப் கூறினார்.