![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-12-Feb-2024-01-05-PM-4739.jpg)
கூச்சிங், பிப் 12 – சரவாவில் பெத்தோங்கிலுள்ள பத்து லிந்தாங் நீண்ட வீடுகள் குடியிருப்பு பகுதிக்கு அருகேயுள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது இளைஞனின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆற்றில் 5 மீட்டர் ஆழத்தில் காணப்பட்ட அந்த இளைஞனின் உடலை தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு உறுப்பினர்கள் மீட்டனர். ஆற்றின் கரைக்கு கொண்டு வரப்பட்ட அந்த இளைஞனின் உடலை பரிசோதனை செய்த மருத்துவ உதவியாளர்கள் அவன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். நேற்று மாலை மணி 3. 50 அளவில் நீந்திக்கொண்டிருந்தபோது வேகமான நீரோட்டத்தில் இருவர் அடித்துக் செல்லப்பட்டனர். எனினும் அந்த சம்பவத்தில் மற்றொரு பதின்ம வயது இளைஞைன் உயிர்தப்பினான்.