![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/court.jpg)
கோலாலம்பூர், மார்ச் 29 – Peruவில் இரு மலேசியப் பெண்களை கடத்தியதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை இரண்டு ஆடவர்களும் திருமணமான தம்பதியரும் மறுத்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பெருவில் La Lagunaவிலுள்ள வீட்டிலிருந்து 19 மற்றும் 25 வயதுடைய இரு பெண்களை கடத்தியதாக 37 வயதுடைய Gan Zhang Gui, அவரது 34 வயதுடைய மனைவி Cham Li Na , 26 வயதுடைய Mohd Ismail Aiman Muhamad Radhuan, 37 வயதுடைய Lim Chin Hock மற்றும் Peruவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள Tony ஆகியோர் மீது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 34 ஆவது விதியின் கீழ் 2007ஆம் ஆண்டின் குடிநுழைவு சட்டத்தின் கீழ் ஆள் கடத்தல் சட்டத்திற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் தலா 10,000 ரிங்கிட் ஜாமின் வழங்குவதற்கு நீதிபதி Azura Alwi அனுமதித்தார். அதோடு இந்த வழக்கு விசாரணை முடியும்வரை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிபிதி உத்தரவிட்டார். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு மே 20ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும். குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் பெருவில் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக மலேசியாவுக்கு கொண்டுவரப்பட்டனர்.