Latestமலேசியா

பெர்லீசில், மின்னல் தாக்கியதில், உடல் முழுவதும் தீப்புண் காயங்களுக்கு இலக்கான சிறுவன் ; மருத்துவமனையில் அனுமதி

கங்ஙார், டிசம்பர் 5 – பெர்லீஸ், சிம்பாங் அம்பாட்டில், மின்னல் தாக்கியதில், எட்டு வயது சிறுவன் ஒருவன், உடல் முழுவதும் தீப்புண் காயங்களுக்கு இலக்கானான்.

சம்பவத்தின் போது, உடன் இருந்த அவனது தாய் அதனால் பதற்றமடைந்ததாக கூறப்படுகிறது.

நேற்றிரவு மணி எழு வாக்கில், கம்போங் பெர்மாதாங் கெரிசிக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததை, கங்ஙார் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் யுஷரிபுடின் முஹமட் யூசோப் உறுதிப்படுத்தினார்.

மழை பெய்துக் கொண்டிருந்த போது, அண்டை வீட்டில் இருந்த எட்டு வயது முஹமட் அஜிசுல் ஜாபார் எனும் அச்சிறுவனை, அவனது 39 வயது தாயார் நோர் லெலாவத்தி அபு பாகார் வீட்டிற்கு அழைத்து வந்த போது, அவனை மின்னல் தாக்கியது.

அதனால் உடல் முழுவதும் தீப்புண் காயங்களுக்கு இலக்கான அச்சிறுவன், உடனடியாக கங்ஙாரிலுள்ள, துவான்கு பெளசியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தோல் சிசிச்சைக்காக சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான்.

அவனது தாயார் வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!