![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-10-Nov-2023-12-37-PM-8554.jpg)
பெசூட், நவம்பர் 10 – பெர்ஹெண்டியான் தீவில் கட்டுமானத்தில் இருந்த, தங்கும் விடுதி ஒன்றின், மூன்று மாடி உணவக கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் புதையுண்ட அந்நிய தொழிலாளி ஒருவரை தேடி மீட்கும் பணிகள், இன்று காலை மீண்டும் தொடங்கப்பட்டன.
இன்று காலை மணி ஏழு வாக்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த மீட்புப் படை வீரர்கள் அங்கு தேடி மீட்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
அடை மழை தொடர்ந்து பெய்வதால், மீட்புப் பணிகள் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், திரங்கானு மாநில தீயணைப்பு மீட்புப் படையின் முதல் பிரிவுக்கான தலைவர் யுஸ்மரெண்டா மிர்ஜா முஹமட் அலி தெரிவித்தார்.
K9 மோப்ப நாய்கள் துணையுடன் தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
கட்டுமானத்தில் இருந்த தங்கும் விடுதி ஒன்றின், மூன்று மாடி உணவக கட்டடம், நேற்று அதிகாலை மணி 4.30 வாக்கில் திடீரென இடிந்து விழுந்த சம்ப்பவத்தில், அங்கு உறங்கிக் கொண்டுந்த உள்நாட்டு ஆடவர் ஒருவர் உட்பட எழுவர் புதையுண்டனர்.
அவர்களில் நால்வர் பொதுமக்களின் உதவியோடு காப்பாற்றப்பட்ட வேளை ; இருவர் நேற்று நண்பகல் மணி 12.50 வாக்கில் மீட்கப்பட்டனர்.
எஞ்சிய ஒருவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.