Latestமலேசியா

பேங்க் நெகாராவுக்கு மீண்டும் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்

கோலாலம்பூர், பிப்ரவரி 13 – பேங்க் நெகாராவுக்கு மின்னஞ்சல் வாயிலாக நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் இரு வெடிகுண்டு மிரட்டல்கள் ஜோகூரில் விடுக்கப்பட்ட வேளை ; ஒன்று கோலாலம்பூரில் பதிவுச் செய்யப்பட்டது.

எனினும், சோதனையில் அது போலி வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்துள்ளது.

இவ்வேளையில், அந்த வெடிகுண்டு மிரட்டல்களை, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மாஜித் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, தமக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக, ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் எம். குமார் கூறியிருந்தார்.

அதோடு, அதே மின்னஞ்சல் முகவரியிலிருந்து வெடிகுண்டு மிரட்டல்களை பெற்ற மேலும் சிலர், அது குறித்து புகார் செய்திருப்பதாக குமார் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!