Latestமலேசியா

பேரணி ஏற்பாட்டாளர்கள் சட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் – போலிஸ் தலைவர் அறிவுறுத்து

கிள்ளான், மார்ச் 4 – பெர்மிட்டிற்கு விண்ணப்பிப்பது தேவைப்படாவிட்டாலும் அமைதிப் பேரணியை நடத்தும் எந்த ஒரு ஏற்பாட்டாளரும் பேரணியை நடத்துவதற்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்கும் விதிகளுக்கு இணங்க வேண்டும் என போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸருதீன் ஹீசைன் தெரிவித்துள்ளார்.
முன்பு 10 நாட்களாக இந்த நிலையில், இப்போது 5 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதோடு 14 கேள்விகளை உள்ளடக்கிய ஒப்புதல் படிவத்தையும் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஒப்புதல் வழியாக ஏற்பாடு செய்யும் பேரவை சீராக இயங்குமென்றும், குறிப்பாக மற்றவர்களின் வேலையையும் சுதந்திரத்தையும் பாதிக்காமல் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அதுமட்டுமில்லாமல், இந்த சட்டம் தேசிய பாதுகாப்பு அடிப்படை உரிமைகளுக்கு இடையே சமநிலையில் இருப்பதை தீர்மானிக்கும் என வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) இன்று நடைபெற்ற பண்டார் சுல்தான் சுலைமான் காவல்துறை வீட்டு வசதி சாவி ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!